ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

மாசுபாட்டால் அழகாகும் செங்கதிரவன்



வானம் நீல நிறம்!
மேகம் வெள்ளை நிறம்!
மாலைக் கதிரவன்
சிவப்பு நிறம்!
சுற்றுச்சூழல் மாசுபாட்டால்
மேலும் அழகாகும் செங்கதிரவன்!
இவை நான்கிற்குமான
தொடர்பு ஒன்று உண்டு!!!
என்ன தெரியுமா?
தொடர்பு: 'ராலே ஒளிச்சிதறல்' (Rayleigh scattering).
நுண்ணிய துகள்களின் வழி ஒளி பயணிக்கும் பொழுது அதிக ஆற்றலும், குறைந்த அலைநீளமும் கொண்ட நீல நிறம் சிதறடிக்கப்படுகின்றன.

1. வானம் - நுண்ணிய துகள்களால் நிரம்பிய ஒரு பகுதி - ராலே ஒளிச்சிதறல் நடைபெறுவதால் நீலமாக காட்சி தருகிறது.

2. மேகம் - சிறிய முதல் பெரிய மூலக்கூறுகளால் நிரப்பப்பட்ட பகுதி - பெரும்பாலான நிறங்கள் சிதறடிக்கப்பட்டு நிறங்களின் கூட்டமைப்பால் வெண்மையாய் காட்சி தருகிறது. மழை மேகமாக இருப்பின், அது ஒளியை எதிரொளித்து மறுபக்கம் ஒளியை ஊடுருவவிடாமல் தடுப்பதால் கருநிறத்தில் காட்சிதருகிறது.

3. மாலையில் கதிரவன் நம் கண்பார்வைக்கு நீண்ட தொலைவில் இருப்பதால் அனைத்து நிறங்களும் வானம் மற்றும் மேக கூட்டங்களால் சிதறடிக்கப்பட்டு அதிக அலைநீலம் கொண்ட சிவப்பு நிறத்தை மட்டும் நம் கண்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறது.

4. எனவே, சுற்றுச்சூழல் அதிகம் மாசடையும் நேரத்தில், அனைத்து நிறங்களும் செவ்வனே சிதறடிக்கப்படுவதால், கதிரவனின் சிவப்பு நிறம் மேலும் மெருகேறும். எனில், சுற்றுச்சூழல் மாசுபட்ட பகுதிகளில் நின்று மிக அழகிய கதிரவ மறைவை கண்டுகளிக்கலாம்.


சக்திவேல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக