வெள்ளி, 29 நவம்பர், 2019

black hole கருந்துளை

ஆறுதான் மொத்த பரந்துவிரிந்த பேரண்டமாக உருவகித்துக் கொண்டால், சிறு கற்களை அவ்வாற்றின் மீது வீசுகையில் ஏற்படும் சிற்றலைகள்தான் ஒரு பால்வழித்திரளாக (milky way) எண்ணலாம். மொத்த பால்வழித்திரளும் உயிர்ப்புடன் இருக்க காரணம் இறந்த விண்மீன்கள்தான், அதாவது கருந்துளைகள் (black holes). 

கருந்துளைகள் எனப் பெயர்பெற காரணம், உண்மையில் அவைகள் ஒளியையும் விட்டுவைக்காது விழுங்கும் தன்மையினால்தான். எளிமையாக கூறினால், நான்கு பக்கங்களை இறுக்கமாய் கட்டிய ஒரு துணியில் பந்துகளை போட்டு, அத்துணியின் நடுவில் ஒரு துளையினை இட்டால், அந்த பந்துகள் எப்படி அந்த துளை நோக்கி ஒடி, கீழ் விழுமோ அப்படிதான் பந்துகள் போலுள்ள கோள்களும், விண்கற்களும், சூரியன்களும், விண்மீன்களும், கருந்துளையினால் ஈர்க்கப்பட்டு வீழ்ந்துவிடுகின்றன. 

நமது சூரியக்குடும்பம் இருக்கும் பால்வழித்திரளிலே மூன்று வகையான கருந்துளைகள் இருப்பதாக நாசா குறிப்பிடுகிறது. ஒன்று அணு அளவில் இருக்கும் கருந்துளைகள், இரண்டாவதாக stellar வகைகள் (interstellar படம் ஞாபகம் வருகிறதா), மூன்றாவது super massive வகைகள். கருந்துளைகள் என்றாலே அதன் ஆற்றல் அதிகமென்பதை நாமறிவோம். ஆற்றல் (energy), நிறையுடன் தொடர்புடையது, எப்படி? அதாங்க நம்ம நித்யானந்தா சொன்னாரே, sorry sorry, ஐன்ஸ்டீன் சொன்னாரே, E = mc2. இதனையும் நீங்கள் எளிதில் விளங்கிக்கொள்ள, ஒரு சிறு கயிறை எடுத்து ஒரு முனையில் 100 கி கல் ஒன்றை கட்டி, மறுமுனையை உங்கள் கையில் வைத்து வேகமாக சுற்றுங்கள், 100 கி கல்லின் எடை அதிகமாவதை உணர்வீர்கள். அதாவது, பொருளிலிருந்து வெளிப்படும் ஆற்றல், எடையாய் மாறும் (E = mc2) அது போலவே, ஒரு அதீத நிறைகொண்ட விண்மீன் இறக்கையில், அது ஆற்றலாய் மாறுகிறது, அப்படி வெளிப்படும் ஆற்றல் அதன் நிறையை மேலும், மேலும் அதிகரிக்கிறது. அப்படிதான் கருந்துளைகளின் ஆற்றலோ, நிறையோ அதிகமாகிறது. அப்படி அதிகமாகையில், தனக்கருகில் இருக்கும் அனைத்து விண்மீன்களையும், கோள்களையும் விழுங்கிவிடுகின்றன, அவற்றை விழுங்குவதாலும் அதன் நிறையும் ஆற்றலும் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன.

அப்படிதான், சிறிய அணுவளவு கருந்துளைகள், மலையளவு நிறைகொண்டதாக இருக்கிறது, Stellar எனப்படும் கருந்துளைகள் சூரியனை விட 20 மடங்கு அதிக நிறைகொண்டதாகவும், super massive வகைகள் சூரியனை விட 1 மில்லியன் மடங்கு அதிக நிறைகொண்டதாகவும் இருக்கின்றன. நம்பால்வழித்திரளின் நடுவே இப்படியொரு super massive கருந்துளை இருப்பதாலேயே நம் உலகம் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நாமிருக்கும் சூரியக்குடும்பத்தில் ஒரு கருந்துளை உருவாக வேண்டுமானால், அத்துளை, சூரியன் இறப்பால்தான் நிகழ முடியும். அப்படி நாளைக்கே சூரியன் இறந்து கருந்துளையை உருவாக்கினாலும், அடுத்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அக்கருந்துளையை (bcz, mass increases due to increasing energy) சூரியக்குடும்ப கோள்கள் சுற்றிவர வாய்ப்பிருக்கிறது!

கல் விழுந்த இடம்தான், அந்த super massive கருந்துளை! சிறுகற்கள் - stellar வகைகள்! உருவாகும் அலைகள் தான் - ஈர்ப்பலைகள் (gravity)! அந்த அலைகளின் ஏதோவொரு சிறு புள்ளியில்தான் சூரியக்குடும்பம் இருக்கிறது, அப்புள்ளியின், ஒரு ஓரத்தில்தான் பூமியும் உருண்டு கொண்டிருக்கிறது உயிர்ப்புடன்!

-சக்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக